புதுபெலன்
தாருமே
புதுபெலன் தாருமே
ஆவியான தேவனே
பெலன் எனக்கில்லையே
உம்பெலன் வேண்டுமே (2)
பெலனற்ற எனக்கு உதவிடவேண்டுமே
பெலனான கன்மலையே (2)
கழுகைப்போல செட்டையடித்து எழும்பிடுவேன் நான்
கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான்
ஓடினாலும் இளைப்படையேனே
நடந்தாலும் நான் சோர்வடையேனே - (2) - புதுபெலன்
இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள்
வாலிபரும் வழிதவறி இடறிபோவார்கள்
கர்த்தருக்கு காத்திருப்பேனே
புதுபெலன் என்றும்; அடைந்திடுவேனே - (2) - புதுபெலன்
சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை
சர்வவல்ல தேவனவர் இளைப்படைவதில்லை
சோர்ந்திடும் போது பெலன்தருவாரே
சத்துவம் என்னில் பெருகச்செய்வாரே - (2) - புதுபெலன்